tamilnadu

img

சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சேலம், நவ.13- கெங்கவல்லி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி பேரூராட்சிக் குட்பட்ட 7ஆவது வார்டு கணக்கு பிள்ளை தெருவில் காமாட்சி (80) மற்றும் அவரது மகள் சுமதி இரு வரும் கூரை வீட்டில் வசித்து  வந்துள்ளனர். இந்நிலை யில் புதனன்று கெங்கவல்லி பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஈரப்பதத்தில் இருந்த வீட்டின் மண்  சுவர் திடீரென  இடிந்து மூதாட்டி காமாட்சி மீது விழுந் துள்ளது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகள் சுமதி உயிர் தப்பினார்.  இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் மூதாட்டி காமாட்சி யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை யடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.