மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்தும், சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு திமுக இளைஞரணியினர் நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவழகன், மணிகண்டன், சந்திரமோகன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.