tamilnadu

img

ரயில் நிலையம் அமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம்

சேலம், செப்.12-  ஆத்தூர் காட்டுக்கோட்டை பகுதியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  சேலம் மாவட்டம், ஆத்தூர் காட்டுக்கோட்டை பகுதி யில் ரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி ஆத்தூர் காட்டுக் கோட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன்பு  வியாழனன்று  இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கை யெழுத்து இயக்கம் நடைபெற்றது.  இந்த கையெழுத்து இயக்கத்தை சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் துவக்கி வைத்தார். இதில் வாலிபர் சங்கத்தின் தாலுகா தலைவர் பெரியண்ணன், செயலாளர் பிரபு, துணைச் செய லாளர் பாலு, வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர்  ஏ.முருகேசன், விவசாயிகள் சங்க நிர்வாகி வெங்கடாசலம்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.