tamilnadu

img

கொட்டும் மழையில் சேலம் உருக்காலை தொழிலாளர்கள் 28 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

சேலம், செப்.1- சேலம் உருக்காலை தொழி லாளர்கள் மத்திய அரசின் தனி யார்மய நடவடிக்கையை கண்டித்து ஞாயிறன்று 28 ஆவது நாளாக கொட்டும் மழையிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.  தமிழகத்தின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ள சேலம் உருக்காலையை  தனியார்மயமாக்கு நடவடிக் கையில் மத்திய அரசு ஈடுபட்டு  வருகிறது. சேலம் உருக்காலை உள்ளிட்டு மூன்று உருக்காலை களை தனியாருக்கு விற்க உலக அளவில் மத்திய அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. கடந்த ஆக.20 ஆம் தேதியோடு ஒப்பந்தம் காலம்  முடிவடைந்தது. மேலும் இரண்டு  வாரம் காலம் நீட்டிப்பு செய்து  வரும் செப்டம்பர்  10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இதனைத்தொடர்ந்து சேலம்  உருக்காலை தொழிலாளர்கள் ஆலையை தனியாருக்கு விற்க  அனுமதிக்க முடியாது என வலி யுறுத்தி கடந்த ஆக.5ஆம் தேதி  முதல் 21 நாட்களாக காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அனைத்து தொழிற் சங்கம் சார்பில் நடைபெறும்  இந்த காத்திருப்பு போராட்டத்தில்  சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பங்கேற்று வாழ்த்தி பேசினார். இதில் சிஐடியு  மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்வம், சிஐடியு உருக்காலை  தொழிலாளர் சங்க செயலாளர்  சுரேஷ்குமார் உள்ளிட்டு அனைத்து  தொழிற்சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.