ரயில் ரத்து, பாதை மாற்றம் குறித்து தகவல்கள் அறிய உதவி மையங்கள்
சேலம், ஆக.18- சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட் பட்ட பகுதிகளில் ரயில்கள் ரத்து, பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அது பற்றிய தகவல்களை தெரிவிக்க சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங் களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு ரயில்வே யார்டு பகுதியில், இன்டர் லாக்கிங் பணிகள் சனிக்கிழமை (ஆக.17) துவங்கி உள்ளது. இப்பணிகள் வரும் 21ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் சென்னை-சேலம்-கோவை மார்க்கத்தில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட ரயில்களும், கோவை, சேலம் வழியே வட மாநிலங் களுக்கு இயக்கப்படும் 10க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ரத்து, பாதை மாற்றம் குறித்து தகவல்கள் பயணிகள் அறிவதற்கும், முன் பதிவு செய்தவர்கள் டிக்கெட் கட்ட ணத்தை திரும்ப பெற வசதிகள் செய்யப் பட்டுள்ளது. இதன்படி சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய ரயில்வே நிலையங்களில் உதவி மையங்கள் 24 மணி நேரமும் டிக்கெட் பரிசோதனை அலுவ லர்கள் பணியில் இருப்பார்கள். அவர்கள், பயணிகளின் சந்தேகத்தை தீர்த்து வைப் பதுடன், ரத்தான ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்க உரிய வழிமுறைகளை எடுத்துரைப்பார்கள். மேலும் இந்த உதவி மையங்களை தொடர்பு கொள்ள தனியாக தொலைபேசி எண்களையும் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி சேலம்:0427-2330194, ஈரோடு:0424-2284812, திருப்பூர்:0421-2200568, கோவை:0422-2303167, கரூர்:0432-4232139 ஆகியவற்றை பயணிகள் தொடர்பு கொள்ளலாம். மேலும், கோட்ட கட்டுப்பாடு அறையை 138 எண் மூலம் தொடர்பு கொண்டு, விவரங் களை கேட்டறியலாம். இந்நிலையில் ஒரு பகுதி மட்டும் ரத்தான ரயில்களில் ஏற்றப் பட்ட பார்சல்களை உரிய முறையில் பாது காக்க, முக்கிய ரயில்வே நிலையங்களில் தலைமை பார்சல் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பார்சல்களை அடுத்து வரும் ரயில்களில், குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயணிகளுக்கு தேவை யான உணவுகளை கொடுக்க கேட்டரிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள், சேலம் கோட்ட ரயில்வே நிலையங்களில் உரிய உதவிகளை அலுவ லர்களிடம் பெறலாம் என கோட்ட நிர் வாகம் தெரிவித்துள்ளது.
தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தருமபுரி, ஆக.18- சமூக நீதிக்காக பாடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறு வோருக்கு ரூ.1லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக் கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விரு தாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதில் பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடையவும், வாழ்க்கைத்தரம் உயர கடந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பெயர், பிறந்த இடம்,தாய், தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்), கல்வி தகுதி, இனம் மற்றும் சாதி, தொழில், சமூக நீதிக்காக பாடு பட்ட விவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். இதில் பெரியார் கொள்கையில் ஈடுபாடு, சமூக சீர்திருத்தக் கொள்கை குறித்து சிறுகுறிப்பு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவை குறித்து சிறு குறிப்பு போன்ற விவரங்களுடன் அக்டோபர் 10ந் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.
சங்கு ஒலிக்க தற்காலிகத் தடை
நாமக்கல், ஆக.18- நாமக்கல் நகரில் 70 ஆண்டுகள் பழமை யான சங்கு ஒலிப்பதற்கு, நகராட்சி நிர் வாகம் தற்காலிகத் தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில், ஜவாஹர்லால் நேரு சிலை அமைந்துள்ள இடத்தில், கடந்த 1949 ஆம் ஆண்டு தன் னார்வலர்கள், அதிகாரிகளின் கூட்டு முயற்சியால், நேரத்தை அறிந்து கொள்வதற் காகவும், மக்களை துயில் எழுப்பும் வகை யிலும் மண்ணால் சுவர் எழுப்பி அதன்மீது மின் இணைப்புக் கொண்ட வெண்கலச் சங்கு நிறுவப்பட்டது. காலை 5 மணி, 8.30 மணி, நண்பகல் 12 மணி, இரவு 8.30 மணிக்கும் இந்த சங்கு ஒலிக்கும். நாமக்கல்லில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் இச் சங்கு ஒலியானது கேட்கும். கிராமப் புற மக்கள் சங்கொலியைக் கேட்டு தங்களது அன் றாடப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 1998ஆம் ஆண்டு சங்கு இருந்த மண் சுவர் இடிந்ததையடுத்து, தற்போதைய நேரு பூங்கா உள்ள பகுதியில் இரும்புக் கம்பியாலான கோபுரம் அமைக் கப்பட்டு அதில் சங்கு பொருத்தப்பட்டது. மூன்று ஆண்டுக்கு முன்பு சங்கு பழுதடைந் ததையடுத்து, 10 ஹெச்.பி. மோட்டார் பொருத்திய 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேட்கும் வகையிலான புதிய சங்கு பொருத் தப்பட்டது. சுதந்திரத்துக்கு பின் மக்கள் நலனுக்காக வைக்கப்பட்ட, அந்த சங்கை அகற்ற வேண்டாம் என சிலர் கூறி வந்த நிலையும், 70 ஆண்டுகளாக சங்கானது ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில், 20 தினங்களுக்கு முன்பு நகராட்சி பேருந்து நிலையப் பகுதிகளில் வசிக்கும் சிலர், நகராட்சி ஆணையர் கே.எம். சுதாவிடம், சங்கு ஒலியின் சத்தம் அதிகமாக இருப்பதாகவும், ஆரம்ப காலத்தில் நேரத்தை அறிவதற்கான சாதனங்கள் இல்லை, அதனால் இந்த சங்கு ஒலி பயனுள் ளதாக இருந்தது. தற்போது அனைத்து வகை யிலும் நேரத்தை தெரிந்து கொள்வதற்கான வசதி உள்ளது. இனிமேலும் இந்த சங்கு ஒலிக்க வேண்டுமா? அதை அகற்றி விட லாம் என மனு அளித்துள்ளனர். இதற் கிடையே, தன்னார்வலர்கள் சிலர் நாமக் கல்லின் அடையாளங்களில் இந்த சங்கும் ஒன்று. கடந்த 70 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருப்பதைத் தடை செய்யக்கூடாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மற்றொரு மனு ஆணையரிடம் அளிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ் வாறான சூழலில் தான் சில நாள்களாக சங்கு ஒலிக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. பழுத டைந்துள்ளது என காரணம் கூறப் படாலும், சிலரின் எதிர்ப்பால் தான் சங்கு ஒலிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.