tamilnadu

img

கல்வி உதவித்தொகை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு

சேலம், மே 28 -கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் மனு அளித்தனர்.சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2017- 2018 ஆம் ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு இதுவரை கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை. தற்போது இவர்கள் பல்வேறு கல்லூரிகளில் முதலாமாண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி உதவி தொகை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ரோகிணி ரா.பாஜிபாகரே, உரிய நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் உறுதியளித்தார்.

;