சேலம், மார்ச் 5- சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப் புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வியாழனன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தியாவில் செஞ்சிலுவை சங்கம் 1920 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக, அனைத்து மாவட்டங்களிலும் இந்திய செஞ்சிலுவை சங்கம், யூத் செஞ் சிலுவை சங்கம், ஜீனியர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி போன்றவை நடத்தப்பட்டது. கல்லூரிகளில் ரத்ததான முகாம் நடத்தப் பட்டது. இதன் தொடர் நிகழ்வாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி சேலம் அரசுக் கலைக்கல்லூரி, அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி, ஐந்து ரோடு, சோனா கல்லூரி வழியாக சென்று பெரியார் பல்கலைக்கழகத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவை சங்க சேர்மன் முன்னா, துணைத்தலைவர் அனில் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல், பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.