tamilnadu

img

முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவின் ‘நெருப்பாற்றை நீந்திக்கடந்த இயக்கம்’ புத்தகம் வெளியீடு

சேலத்தில் திங்களன்று நடைபெற்ற மார்க்ஸ் சிலை திறப்பு விழாவில் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவின் ‘நெருப்பாற்றை நீந்திக்கடந்த இயக்கம்’ மற்றும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் ‘இந்திய வரலாற்றில் ஒளி வீசும் அத்தியாயம்’ எனும் தலைப்புகளில் தீக்கதிர் நாளிதழில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடப்பட்டது. மாமேதை மார்க்ஸ் சிலை அமைத்துத் தந்தவரும், சேலம் மாநகர மேற்கு ஜங்சன் கிளை செயலாளருமான எ.முகமது அலியின் மகன் எம்.யூசுப்ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் சார்பில் உருவான இந்நூலை மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் வெளியிட, சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கடாச்சலம் பெற்றுக்கொண்டார். இதன்பின் சிலை ஏற்பாட்டாளர்கள் எ.முகமது அலி மற்றும் அவரது மகன் எம்.யூசுப் ஸ்டாலின் ஆகிய இருவரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கௌரவித்தார்.

;