tamilnadu

img

சேலம் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை

சேலம்,அக். 3- சேலம் ஆவின் பால் பண்ணையிலி ருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அரு கில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ச் சியாக புகுவதால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பால் பண்ணையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தளவாய்பட்டி அரு கில் தமிழக அரசின் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகிலுள்ள சித்தனூர், தளவாய்பட்டி, ரெட்டிக்காரர்  உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தேக்கமடை கிறது.

இதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற் பட்டு பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வரு கின்றனர். இதுகுறித்தும், முறையான கழிவு நீர் சுத்திகரிப்பு அமைக்க வேண்டும் என வும் பொதுமக்கள் சார்பில் சம்மந்தபட்ட நிர் வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைக்கப் பட்டும் தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், தொடர்ச்சியாக ஆவின் நிறுவனத்தின் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்காத ஆவின் நிர்வா கத்தைக் கண்டித்து சனியன்று காலை அப்ப குதி பொதுமக்கள் பால் பண்ணையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சமப்வம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.