சேலம், மார்ச் 12- சேலம் அருகில் முறையாக குடிநீர் வழங் காததால் பொதுமக்கள் புதனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஒன்றியம், மரமங்கலத்துப்பட்டி அருகிலுள்ள காமராஜர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் தெரிவித்தும், இதுவரை நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து தாரமங்கலம் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.