tamilnadu

img

முறைசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10ஆயிரம் வழங்கிடுக சிஐடியு ஆர்ப்பாட்டம்

 சேலம், ஜூன் 10- முறை சாரா மற்றும் கட்டுமான தொழி லாளர்களுக்கு கொரோனா வைரஸ் நிவா ரண நிதி ரூ.10ஆயிரமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி சேலம் கட்டுமான நலவாரிய அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கருப்பண்ணன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான சங்கத் தின் மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட்டச் செயலாளர் சி.மயில்வேலன், மாவட்டப் பொருளாளர் மோகன், சிஐடியு சாலைப்போக்குவரத்து சம்மேளன மாநில உதவித் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் எம். குணசேகரன் உள்ளிட்ட கட்டுமான தொழி லாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

;