இளம்பிள்ளை, ஏப்.25-
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர்கோவில், கஞ்சமலை அடிவாரம், நல்லாம்பட்டி கிராமம் உள்ளது. அங்குள்ள ஸ்டீல் பிளான்டை ஒட்டி உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உள்ள காய்கறிகளை அங்கு வரும் மயில்கள் சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் அந்த விவசாயி விஷ மருந்தை தானியத்தில் கலந்து வீசியதாக கூறப்படுகிறது. அதனை உட்கொண்ட சில மயில்கள் மயக்கமடைந்தும், 10க்கு மேற்ப்பட்ட மயில்கள் இறந்த நிலையிலும் கிடந்தன. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளார். இதன் இறப்பு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .