tamilnadu

img

சிபிஎம், மாதர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல்

ஓமலூர், மே 13- மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் ஓமலூர் தாலுகா குழு சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.  சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, சிக்கம்பட்டி பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த 25 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, வெங் காயம், பிஸ்கட், காய்கள் உள்பட்ட நிவா ரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், ஓமலூர் தாலுகா சிபிஎம் செயலாளர் அரியாக்கவுண்டர், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்  டி. பரமேஸ்வரி, சிபிஎம் சிக்கம் பட்டி கிளை செயலாளர் மணிவேல், மாதர் சங்கத்தின் ஓமலூர் தாலுகா செயலாளர் மகேஸ்வரி, மாதர் சங்க சிக்கம்பட்டி கிளைச்  செயலாளர் ஜானகி மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.