tamilnadu

img

தமிழக முதல்வரின் உத்தரவை மதிக்காத  அதிகாரிகள் -  சிபிஎம் கண்டனம்

 சேலம், ஏப் 30-  அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளை திறந்து வைக்க தமிழக முதல்வர் அறிவுறுத்திய நேரத்திற்கு மாறாக அதற்கு முன்பே கடைகளை பூட்ட சொல்லி சாவிகளை எடுத்துச்செல்லும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சிபிஎம் சேலம் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, 

தமிழக முதல்வர் ஊரடங்கு சட்டத்தையொட்டி  காலை முதல் பகல் ஒரு மணி வரை மளிகை கடைகள் திறந்து வைத்துக்கொள்ளலாம் என்றும், தேவை ஏற்பட்டால் சாலையின் ஒரு பகுதி ஒரு நாளைக்கும், இன்னொரு பகுதி மற்றொரு நாளும் கடை வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் , இந்த உத்தரவு பல இடங்களில் அமல்படுத்துவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். குறிப்பாக சீலநாயக்கன்பட்டி பகுதியில் காலை 8 மணிக்கு மளிகை கடை வைத்திருப்பவர்களை கடையை மூடச் சொல்லி மிரட்டுவது , எதிர்ப்பு தெரிவித்தால் கடையை பூட்டி சாவியை எடுத்து செல்வது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறையினால் ஈடுபடுவதனால், மளிகை கடை வியாபாரிகள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 இப்பகுதி என்பது சாதாரண கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி . ஆகவே, மளிகை கடைகளுக்கு  சென்று தான் பொருள்களை வாங்கும் நிலை உள்ளது. அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால் மிகவும் அச்சத்துடன் இருந்து வருகிறார்கள். ஆகவே,  முதலமைச்சர் அறிவித்தது போல் நடைமுறையை அமுல் படுத்திட வேண்டும் என அம்மனுவில் கேட்டுக்கொண்டுள்ளா.ர்.