tamilnadu

img

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

சேலம், ஜூன் 23- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சேலத்தில் நடை பெற்றது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் சேலத்தில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை சேலம் மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும், இசை அமைப் பாளருமான ஜி.வி.பிரகாஷ் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரி வித்தார். இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, குழந்தைகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்களை தடுக்க பெற்றோர்களும், பொதுமக்களும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த மராத்தான் ஓட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.