tamilnadu

அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி

சேலம், ஆக.18- இந்திய அஞ்சல்துறை சார்பில் நடை பெறும் கடிதம் எழுதும் போட்டியில் மாண வர்கள், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் கூறியிருப்பதாவது, இந்திய அஞ்சல் துறை யால் கடந்தாண்டு நடத்தப்பட்ட என் தாய்  நாட்டிற்கு ஒரு கடிதம் போட்டி, மக்களி டையே வரவேற்பை பெற்றது.  இவ்வாண்டு போட்டிக்கான தலைப்பு ‘அன்புள்ள பாபு நீங்கள் அழியாதவர்’ என  அறிவிக்கப்பட்டுள்ளது. கடிதங்களை நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் அனுப்ப  வேண்டும். கடைசி தேதிக்கு பின் அனுப்பி  வைக்கும் தபால்கள் ஏற்கப்படமாட்டாது.  கடிதங்களை ஸ்கேன் செய்து மைகவ் என்ற அரசு இணையதளத்திலும் நவம்பர் 30க்குள் பதிவேற்றம் செய்யலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் கடிதம் எழுதலாம். அனைத்து வயதினரும் போட்டியில் பங்கேற்கலாம். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு லெட்டர் பிரிவு, என் வலப் பிரிவு எனவும், 18 வயது தாண்டிய வர்களுக்கு இன்லேண்ட் லெட்டர் பிரிவு, என்வலப் பிரிவு என 4 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் என்வலப் பிரிவில் எழுதுவோர் ஏ-4 அளவு வெள்ளைத்தாளில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலும், இன்லேண்ட் லெட்டர் பிரிவில் எழுதுவோர் ஐநூறு வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள்  மட்டுமே ஏற்கப்படும்.  இந்த போட்டியில் பங்கு பெறுவோர், கடிதத்தின் மேல் (1.1.2019 அன்று என் வயது  18 வயது மேல், 18 வயதுக்கு கீழ் என சான்ற ளிக்கிறேன்) என்ற வாசகத்தை எழுதி கையெழுத்திட வேண்டும். கடிதங்களை, முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ் நாடு வட்டம், சென்னை-600002 என்ற  முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டியில்  மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரி சாக ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5  ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25  ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம்  வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.