சேலம், பிப். 6- சேலத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பில்லை எனவும், சீனாவிலி ருந்து சேலம் திரும்பிய 59 நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை சேலத்தில் ஒருவர் கூட கொரனோ வைரசால் பாதிக்கவில்லை என சேலம் மாவட்ட துணை சுகாதார துறை இயக்குனர் நிர்மல் சன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட சுகாதார துறை தலைமை அலுவலகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு குறித்த முன் எச்ச ரிக்கை நடவடிக்கை மற்றும் கொரனோ வைரஸிலிருந்து பாதுகாத்து கொள் வது குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் தலைமையில் வியாழனன்று நடை பெற்றது. அதனை தொடர்ந்து செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த சுகாதா ரத்துறை துணை இயக்குநர் நிர்மல் சன் கூறுகையில், சேலத்திலிருந்து சீனா சென்று திரும்பிய 59 நபர்களை அவரவர் வீடுகளிலேயே வைத்து கண்காணித்து வருவதாகவும், பல் வேறு காரணங்களுக்காக சீனா சென்று திரும்பிய 59 பேருக்கும் எந்தவித காய்ச்சலும், கொரனோ வைரஸ் நோய்க்கான எந்தவித அறிகு றியும் இல்லை என தெரிவித்தார். மேலும், சேலம் அரசு மருத்துவமனை யில் 10 பேர் கொண்ட மருத்துவக் குழு உள்ளடக்கிய பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்து வர்களுக்கான பாதுகாப்பு உபகர ணங்கள் போதிய அளவில் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர், பொதுமக்கள் யாரும் பீதிய டைய தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டார்.