tamilnadu

img

சர்வதேச பெண்கள் தின கொடியேற்று விழா

சேலம், மார்ச் 9- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சேலம் தாலுகா மோகன் நகர் கிளை சார்பில் சர்வதேச பெண் கள் தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாதர் சங்க மாவட்டத் தலைவர் டி.பரமேஸ்வரி கூறியதாவது, மக்கள்தொகை கணக்கெடுப்பானது, ஜூன் மாதம் வீடாக நடைபெறவுள்ளது. இந்த கணக்கெடுப்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது. தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இந்திய தேசம் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்ற நாடாக இல்லை. மோடி ஆட்சியில் குறிப்பாக பாஜக ஆளுகின்ற  மாநி லங்களில் பாஜக எம்எல்ஏக்களால் தொடர்ந்து பெண்கள் பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொ டுமை என்பது தொடர்கதையாகவே உள்ளது. இப்ப டிப்பட்ட தேசத்தில் பெண் குழந்தைகளை பாது காக்க உலக மகளிர் தினமாம். வெட்கக்கேடாக உள் ளது என கூறினார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு எல்.விக்னேஷ்வரி தலைமை வகித்தார். இதில், தாலுகா தலைவர் எஸ். இராஜேஸ்வரி, தாலுகா செயலாளர் எம்.செல்வி, பூங்கோதை, நவ பாரதி, எஸ்.திவ்யா மற்றும் மோகன் நகர் குழந்தைகள் உள்பட பெண்கள் கலந்து கொண்ட னர்.

;