சேலம், ஆக.8- இந்திய வனப் பணி தேர்வில், சேலத்தை சேர்ந்த மாணவன் தேர்வாகி உள் ளார். சேலம் மாவட்டம், ஓம லூர் தாலுகா செம்மடைப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்-லட்சுமி. இவர் களுக்கு வெங்கடேஷ் மற்றும் ஏழு பெண் குழந் தைகள் உள்ளனர். மாணிக்கம் லட்சுமி குடும்பத் தினர் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில் வெங்கடேஷ் ஓமலூரில் உள்ள பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து 2010ஆம் ஆண்டு வன கல் லூரியில் சேர்ந்து இந்திய வனப் பணிக்கான படிப் பினை தேர்வு செய்தார். தற்போது இந்திய அரசால் திரிபுரா மாநிலத்தில் இந்திய வனப் பணி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது வெற்றிக்கு பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதரிகள், கல்லூரிப் பேராசிரியர்கள் உறுதுணை யாக இருந்ததாக கூறினார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் இந்த வனத்துறை பணிக்காக எண்ணற்ற துயரங்களைக் கடந்து படிப்பினை முடித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்போது நான் பொறுப்பேற்கும் மாநிலத்தில் வனத்தை பாதுகாப்பதற்கும், வன உயிரினங் களை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவேன். குறிப் பாக மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் என்னுடைய பணி இருக்கும் என தெரிவித்தார்.