சேலம், ஆக. 19 - ஒருங்கிணைந்த தோட் டக்கலை அபிவிருத்தித் திட்டம் 2020-21 –ன் படி அனைவரது வீடுகளிலும் வீட்டு காய்கறித் தோட் டம் அமைத்து காய்கறி கள் உற்பத்தி செய்யத் தேவைப்படும் இடுபொ ருட்களான செடி வளர்ப்புப் பைகள், தேங்காய் நார், உள்ளடங்கிய தளைகள் (ஒரு தளை ரூ.356 வீதம்) விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், தோட் டக்கலைத் துறை மூலமாக உணரிகளுடன் கூடிய சொட்டு நீர்ப் பாசனத்திற்கு ரூ.ஆயிரத்து 400 மற்றும் உணரிகள் இல்லாத சொட்டு நீர்ப் பாசனத்திற்கு ரூ.320 -ம் பயனாளிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் மானியமாக வழங் கப்படுகின்றது.
மேற்கூறிய காய்கறி தளைகளை மற்றும் சொட்டு நீர்ப் பாசன அமைப்பை கிடைக்கப் பெற்று பயன் பெற சம்பந்தப்பட்ட வட் டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள் ளார்.