சேலம், அக்.17- சேலம் மாநகரப் பகுதி களில் கடுமையான சுகா தார சீர்கேடு நிலவுவதை கண்டித்து புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை 50க்கும் மேற்பட் டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி 45ஆவது வார்டிற்கு உட் பட்ட பஞ்சம்நாயக்கன் ஏரி, இந்திராநகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதி களில் நரிக்குறவர் சமூகத் தைச் சேர்ந்த ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய அடிப் படை வசதிகளை மாநக ராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வில்லை. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநக ராட்சி அதிகாரிகளிடம் முறை யிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப் பகுதி மக்கள் ஆவேசமடைந்து புதனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட முயன் றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதா னப்படுத்தினர். இதனை யடுத்து அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நரிக் குறவர் காலனி பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இத னால் அப்பகுதி முழுவதும் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் குழந்தை களுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரி யப்படுத்தியும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மறுத்து வருகின் றனர். துப்புரவு பணிக்காக தங்கள் பகுதிக்கு யாரும் வருவதில்லை எனவும் குற்றம்சாட்டினர். மேலும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுத்து மக்கள் நோயில்லாமல் வாழ வழி செய்து கொடுக்க வேண்டும். இதே போல், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் தாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஆகவே, குடியிருப்பு மத்தியில் அமைந் துள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.