சேலம், அக்.24. தெலுங்கானா அரசின் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வலியு றுத்தியும் சேலத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெலுங்கானா மாநில போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்.5ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர். இந்நிலையில் அம் மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனை கண்டித்து அம்மாநிலம் முழு வதும் அனைத்து தொழிற்சங்களும் பல்வேறு போராட் டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தெலுங்கானா அரசின் தொழிலாளர் விரோத போக்கு மற்றும் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வலியு றுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகப்பெருமான் தலைமை தாங்கினார். 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.