tamilnadu

img

கொரோனா காலத்தில் மக்கள் துயரை துடைத்திடுக மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்

சேலம், ஜூலை 6- கொரோனா காலத்தில் மக்கள் படும் துயரத்தை போக் கிட வலியுறுத்தி சிபிஎம் சேலம் மாநகர் வடக்கு குழு சார் பில் சேலம் மாநகர வடக்கு பகுதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டு இணைப்பிற் கான மின் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அநியாயமாக வசூலிக்கப்பட்ட மின் கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.

 மூன்று வார மாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்.  ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், சாலை யோர வியாபாரிகள், திருமண மண்டபத்தில் சுப நிகழ்ச்சி களில் ஈடுபடும் தொழிலாளர்கள், திரையரங்க தொழிலாளர் கள், வெள்ளி பட்டறை, கட்டுமான தொழிலாளர்கள் உள் ளிட்ட தொழிலாளர் குடும்பத்திற்கு கொரோனா காலத்தில் மாதம் தலா ரூ.12 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாந கர வடக்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, சேலம் மாநகர வடக்கு செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை வகித்தார். மேலும், 10 ஆயிரம் வீடு களில் மக்களை சந்தித்து பிரச்சாரம் மற்றும் சத்திரம், சாமி நாதபுரம், பள்ளப்பட்டி, சின்னேரிவயல்காடு, ரெட்டியூர், அழகாபுரம், அஸ்தம்பட்டி, பெரமனூர், புதிய பேருந்து நிலை யம், இராமகிருஷ்ணா பார்க் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இ்தில், மாநகர வடக்கு குழு உறுப்பினர்கள் முருகேசன், செந்தில், முருகானந்தம், ராஜேஸ், தேவி,கதிர்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.