இளம்பிள்ளை, நவ.11- இளம்பிள்ளை அருகே பரிகாரம் செய்வதாக கூறி நகை கள் பறித்து சென்ற மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள அரிய லூர் அடுத்துள்ள சீரகாபாடி கடத்தூர் பகுதியைச் சேர்ந்த வர் பூவராகவன். இவருக்கு அம்மாசி (44) என்ற மனை வியும், ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், செவ்வா யன்று பூவராகவன் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதாக மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். வீட்டில் இருந்த அம்மாசியிடம், உங்கள் வீட்டில் பில்லி சூனியம் இருக்கிறது. இதற்கு பரிகா ரம் செய்தால் நல்ல நிலைமைக்கு வந்து விடுவீர்கள் என்று கூறியுள்ளார். மேலும், அணிந்திருக்கும் நகைகளை அருகில் உள்ள கோவிலில் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால் பில்லி சூனியம் ஓடி விடும் என்று என கூறியுள்ளார். அதனை நம்பி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் கால் பவுன் கம்மல் உள்ளிட்ட நகைகளை கழட்டி கொடுத்துள்ளார். இதன்பின்னர் நகைகளை எடுத்துக் கொண்டு மர்மநபர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து அம்மாசி, ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஆட்டையாம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.