சேலம், மேட்டூரையடுத்த கர்நாடக எல்லை அருகே பாலாறு பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இவர் கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிசூட்டில் பலியாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
மேட்டூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தர்மபுரி ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் பாலாற்றுக்கு சென்று மீன் பிடிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர், மான் வேட்டைக்கு தான் வந்துள்ளதாக நினைத்து அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரவி மற்றும் இளைய பெருமாள் ஆகியோர் தப்பித்து தலைமறைவாகியுள்ளனர். ராஜா என்பவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் தமிழக கர்நாடக வெள்ளையான அடிப்பாளருக்க காவிரி ஆற்றல் ராஜாவின் சடலமாக மீட்கப்பட்டது. தகவல் அறிந்த செட்டி பெட்டி கோவிந்தபாடி சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவிரி கரையில் குவிந்தனர். இதனால் இரு மாநில எல்லையில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார், பவானி டிஎஸ்பி, அமிர்த வர்த்தினி தலைமையில் வந்த போலீசார் காவிரி ஆற்றில் மிதந்த ராஜாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மீனவர் கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக தகவல் பரவிய நிலையில், மாநில எல்லையில் பதற்றம் நிலவுவதால், இருபுறமும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.