tamilnadu

img

ஏற்காட்டில் முதல் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஏற்காடு, ஜூன் 27-  ஏற்காட்டில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்ட தையடுத்து அப் பகுதியில் தடுப்பு நடவடிக் கைகள் தீவிரப் படுத்தப்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காடு காவல் நிலையம் அருகில் வசித்து வரும் 50 வயது பெண்மனி ஒருவர் தனது தந்தை இறந்ததையடுத்து, கடந்த 22 ஆம் தேதியன்று பெங்களூர் சென்றுவிட்டு புத னன்று ஏற்காடு திரும்பியுள்ளார். அவருக்குக் கொரோனா பரி சோதனை மேற்கொண்டதில் வைரஸ் தொற்றால் அவர் பாதிக் கப்பட்டது உறுதியானது. இதனை யடுத்து, வெள்ளியன்று அப்பெண்  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும், அவருடன் தொடர்பில் இருந் தவர்களும் என நான்கு நபர்கள், ஏற்காடு ஊராட்சிக்கு சொந்த மான சுவேதா குடில் எனும் தங்கும்  விடுதியில் தனிமைப்படுத்தப்பட் டுள்ளனர். மேலும், ஏற்காடு நக ராட்சி சார்பில் அப்பெண்ணின் வீடு  மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகு திகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

;