tamilnadu

img

தொழிலாளர்களுக்கு முறையாக விடுப்பு வழங்கிடுக சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து தொழிலாளர்கள் பேரவை வலியுறுத்தல்

சேலம், மே 14-முறையாக தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க ஆண்டு பேரவை வலியுறுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து சேலம் கிளை ஆண்டு பேரவை சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் கிளை தலைவர் எம்.லியாகத் அலி தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. சேலம் கோட்டம் பொதுச்செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து பேசினர். சாலை போக்குவரத்து சம்மேளன துணை தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், ஓசூர் நிர்வாகி குமார்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பொதுச்செயலாளர் எம்.கனகராஜ் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் சந்திரன், பொருளாளர் செல்லப்பன் ஆகியோர் அறிக்கை முன் வைத்து பேசினர்கள்.முன்னதாக, இப்பேரவையில் சுழல் முறை போஸ்டிங், விடுப்பு மறுப்பை கண்டித்தும், வண்டி தருவதில் பாரபட்சம் காட்ட கூடாது. டீசல் சிக்கனம் குறித்து நிர்பந்தம் செய்ய கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதனையடுத்து, சங்கத்தின்புதிய தலைவராக எம்.லியாகத்அலி, செயலாளராக ஆர்.சந்திரன், பொருளாளராக பி.கலைச்செல்வன், உதவி தலைவர்களாகசெந்தில்குமார், சுப்பிரமணி, உதவி செயலாளர்களாக பி.செல்வகுமார், எம்.பூமாலைஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.