சேலம், டிச. 5- சாக்கடை வசதி, குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்ப டை வசதிகள் செய்து தராத மாநக ராட்சி நிர்வாகத்தை கண்டித்து சேலம் பச்சபட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 40 ஆவது டிவிசன் பச்சப்பட்டி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் சாக் கடை, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு சிர மத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இப்ப குதி முழுவதும் வெளியேற வழியின்றி தேங்கி வெள்ளக் காடாக காட்சியளித்தது இதில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப் புகள் நீரில் மூழ்கின. எனவே மழைநீர் மற்றும் வீட்டுக் கழி வுகள் வெளியே செல்லும் வகை யில் சாக்கடை வசதி மற்றும் சாலை வசதி அமைத்துத் தர வலி யுறுத்தி மாநகராட்சி அதிகாரி களிடம் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக் கூறி பச்சப் பட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை காவல்துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட் டத்தை கைவிடப்போவ தில்லை என போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து காவ துறை உயரதிகாரிகள் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேரில் வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் விரை வாக சாக்கடை மற்றும் சாலை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைய டுத்து உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தற்காலிகமாக போராட் டத்தை கைவிட்டனர். இப்போ ராட்டத்தால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப்ப குதியில் பரபரப்பு நிலவியது.