சேலம், செப்.28- விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், இச் சட்டத்திற்கு ஆதரவளித்த அதிமுகவை கண்டித்தும் திங்களன்று தமிழகம் முழுவதும் திமுக தோழமை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர். சேலம் புதிய பேருந்து நிலையம் கலைஞர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன், சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலை வர் ஜெயபிரகாஷ், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாநகர் மாவட்ட செய லாளர் ஜெயச்சந்திரன், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதேபோல், சேலம் மாநகர் கிழக்கு, மேற்கு, வடக்கு, சேலம் தாலுகா, ஓமலூர், மேச்சேரி, நங்க வள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, பனமரத்துப்பட்டி, வாழப் பாடி, ஆத்தூர், கல்வராயன் மலை, ஏற் காடு, கெங்கவல்லி, பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். வெங்கடபதி, ஞானசௌந்தரி, எம். சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், பழனி முத்து, வி.கே.வெங்கடாசலம், எ.ராமமூர்த்தி, ஜி.கணபதி, இடைக் கமிட்டி செயலாளர்கள் பி.ரமணி, எம். கனகராஜ், என்.பிரவீன் குமார், பழனி சாமி, வசந்தி, மணிமுத்து, அரியா கவுண்டர், பெரியண்ணன், சேகரி, நேரு, எ.முருகேசன், எஸ்.கே.சேகர், பொன்னுசாமி, ஜோதிகுமார், மேவை. சண்முகராஜா, மாநாட்டுக் குழு உறுப் பினர்கள் பி. சந்திரன் டி.பரமேஸ்வரி, சிஐடியூ மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு திமுக மாவட்ட தலைமை அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலா ளர் சு.முத்துசாமி, சிபிஎம் மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் துரைராஜ், ப. மாரி முத்து மற்றும் சிபிஐ, காங்கிரஸ், மதி முக, கொமுதேக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் பெருந்துறை, மேட்டுக் கடை, கோபி, பவானி, ஜம்பை, கவுந் தப்பாடி, சத்தியமங்கலம் நகரம், அரி யப்பம்பாளையம், சிக்கரசம்பாளை யம், அரசூர், கடம்பூர், புளியம்பட்டி, பவானிசாகர், மொடக்குறிச்சி, கொடு முடி, சிவகிரி, அந்தியூர், சென்னிமலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 50க் கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
கோவை
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப் பாட்டத்திற்கு கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கி னார். திமுகவின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ந.பழனிச்சாமி, சிங்காநல் லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், சிபிஎம் மாவட்ட செயலா ளர் வி்.இராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் திர ளாக கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், சிங்கை, பீளமேடு, பெரியநாயக்கன் பாளை யம், மதுக்கரை, சூலூர், பேரூர், தொண் டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.மனோகரன், எஸ்.கிருஷ் ணமூர்த்தி, வி.பெருமாள், என்.பால மூர்த்தி, எஸ்.கருப்பையா, ஆர்.வேலு சாமி, என்.ஜெயபாலன், அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், மற்றும் இடைக்க மிட்டி செயலாளர்கள் வி.தெய்வேந்தி ரன், கே.பாண்டியன், ரவிச்சந்திரன், நாகேந்திரன், எம்.ஆறுமுகம், ஆர்.கோபால், என்.ஆர்.முருகேசன், என். ஆறுச்சாமி, சிராஜூதின், மகாலிங்கம், வி.எஸ்.பரமசிவம், அரங்க செயலாளர் கள் மதுசூதணன், எஸ்.மூர்த்தி, என்.பி.ராஜேந்திரன், இன்ஜினியரிங் அரங்க செயலாளர் டி.செந்தில்குமார் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் திர ளாக பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி தொலைபேசி நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாப்பி ரெட்பட்டி, நல்லம்பள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப் பிரமணி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலா ளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, இரா.சிசுபாலன், டி.எஸ்.ராமச்சந்தி ரன், இடைக்கமிட்டி செயலாளர்கள் ஆர்.ஜோதிபாசு, என்.கந்தசாமி, கே. தங்கராஜ், ஆர்.மல்லிகா, சி.வஞ்சி, கே. குப்புசாமி, பி.ஜெயராமன், விசிக மாநில அமைப்பு செயலாளர் கி. கோவேந்தன், மாவட்ட செயலாளர் கி. ஜானகிராமன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் யாசின் தென் றல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திருப்பூர்
திருப்பூர் அவிநாசி, ஊத்துக்குளி, தாராபுரம், உடுமலை, பல்லடம், மடத் துக்குளம், குடிமங்கலம், காங்கேயம், குன்னத்தூர், பல்லகவுண்டன்பாளை யம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மையங் களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் திருமூர்த்தி, அரசகுமார், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி. சுப்பிரமணியம், இடைக்கமிட்டி செயலாளர்கள் தண்ட பாணி, கி. கனகராஜ், சசிகலா, கே.ஏ. சிவசாமி, பழனிசாமி, சிபிஐ என்.சேகர், காங்கிரஸ் கட்சி கிருஷ்ணன், மதிமுக சிவபாலன், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ரோபோ ரவி, விசிக தமிழ் வேந்தன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சின்னசாமி மற் றும் பெரியார், விவசாய அமைப்புக ளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், வெப்படை, நாம கிரிப்பேட்டை, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலா ளர் என்.ஆர்.சங்கர், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி, மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.