சேலம், மார்ச் 8- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஞாயிறன்று சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி குணவதி பங்கேற்றார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி சேலத்தில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. மத்திய தகவல் தொடர்பு கள உதவி அலுவலர் பழ னியப்பன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட நீதி பதி குணவதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண் ணின் பெருமைகள் குறித்தும், பெண்களின் பாதுகாப்புக் கான சட்ட உரிமைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பெண்களின் நலன் மற்றும் சமூக நலனுக்காக செயல்பட்ட பெண்களுக்கு விருதுகளை வழங்கி கௌர வித்தார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளா தேவி, மாவட்ட சமூக நல அலுவ லர் கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட மைய நூலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமைப்பின் தலைவர் பொன் சந்திரன் தலைமையில், மைய தலைமை கொள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பிரேமலதா, சமூக ஆர்வலர் சுமதிஸ்ரீ, நூலக முதன்மை அலுவலர் சக்திவேல் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஏற்காடு ஏற்காடு அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. டிஇஎல்சி பள்ளி மற்றும் கஸ்தூரிபா காந்தி வித்யா பாலிகா பள்ளியை சேர்ந்த 10 பெண் குழந்தைகளுக்கு அஞ்ச லகத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட் டது. இத்திட்டத்தை ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவ சக்தி ரவிச்சந்திரன் துவக்கி வைத்து கணக்கு புத்தகத்தை பெண் குழந்தைகளிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஜோஷி பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.