இளம்பிள்ளை, பிப்.16- அனுமதியில்லாமல் போடப்பட்ட குடிநீர் இணைப்புகளை ஊராட்சி நிர்வா கத்தினர் துண்டித்துள்ளனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக் குட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 38 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு காவிரி குடிநீர் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தன. ஆனால் இந்த குடிநீர் சரியான முறையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யில் ஏறவில்லை என்றும், இதனால் பெரும் பாலான பகுதிகளுக்கு குடிநீர் கிடைக் காமல் தவித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் காவிரி குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு காவிரி குடிநீர் மெயின் பைப் லைனில் போடப் பட்ட 350க்கும் மேற்பட்ட வீடுகள், தொழில் கூடம், விவசாய கிணறு உள்ளிட்ட பல் வேறு இடங்களில் அனுமதி பெறாம ல்போடப்பட்ட குடிநீர் இணைப்புகளை அகற்றிய நிலையில், மேலும் 100-க்கும் மேற்பட்ட முறைகேடான குடிநீர் இணைப்பு கள் கண்டறியப்பட்டுள்ளன. அதனை ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக் குறை நிலவுகின்றது. அனைத்துப் பகுதி மக்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த துண்டிப்பு நடவடிக்கை யால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப் பட்டது.