tamilnadu

ரூ.1லட்சம் டெபாசிட்; மாதம் ரூ.20 ஆயிரம் ரூ.90 ஆயிரம் கோடி மோசடி

சேலம், பிப்.12- சேலத்தில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய் தால் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் வழங்குவ தாக கூறி ரூ.90 கோடி மோசடியில் ஈடு பட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள் ளனர்.  சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஜஸ்ட் வின் ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பாலசுப்பிரமணி என்பவர் கம்பெனி நடத்தி வந்தார். இணை இயக்குனராக வினோத் என்பவரும், சிறப்பு  இயக்குனராக சுப்பிரமணி என்பவரும்  உள்ளனர். இங்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதத்திற்கு ரூ.20 ஆயிரம் கொடுக்கப்படும் என விளம்பரம் செய்தனர். இதனை நம்பி சேலம் மற்றும்  சுற்றுவாட்டாரத்தை சேர்ந்த ஏராள மானோர் பணத்தை டெபாசிட் செய்தனர்.  இந்நிலையில், சின்னதிருப்பதி அபி ராமி கார்டன் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதில், புதிய பேருந்து நிலையம் எதிரே செயல்படும் ஜஸ்ட் வின் ட் டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய் தால் ரூ.20 ஆயிரம் பொடுப்பதாக அறிவித் திருந்தனர். அதன்படி நான் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்திருந்தேன். ஆனால் பல மாத மாக பணத்தை தராமல் ஏமாற்றி வரு கின்றனர் என தெரிவித்திருந்தார்.  இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிரமணி, சுப்பிரமணி ஆகியோரிடம் விசாரணை மேற் கொண்டனர். இதில் அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும், இதுவரை 9 ஆயிரம் பேரிடம் இதுபோல ரூ.1  லட்சம் வீதம் டெபாசிட் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதன்படி சுமார் ரூ.90 கோடி  மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து பாலசுப்பிரமணி, சுப்பிர மணியை போலீசார் கைது செய்தனர்.  பின்னர் இருவரையும் கம்பெனிக்கு அழைத்து சென்று, அங்கிருந்த ஆவணங் களை பறிமுதல் செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். மேலும் தலை மறைவாக உள்ள வினோத்தை போலீசார் தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் சேலத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.