tamilnadu

img

ரூ.45 லட்சம் மதிப்பில் தார்சாலை

இளம்பிள்ளை, மார்ச் 15- இளம்பிள்ளையில் ரூ.45 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் சிறிய பாலம் அமைக்க அடிக்கல் நாட் டப்பட்டது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேரூராட்சி பகு திக்குட்பட்ட 5.வது வார்டு சவுடேஸ்வரி நகர் பகுதி யில் 14வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ்  ரூ. 45 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் சிறிய பாலம் அமைக்கும் பணிக்கு ஞாயிறன்று அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை  வீரபாண்டி சட்ட மன்ற உறுப்பினர்  பி.மனோன்மணி துவக்கி வைத் தார். மேலும், இவ்விழாவில் வீரபாண்டி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வருதராஜ், இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன், இளம்பிள்ளை கூட்டு றவு சங்க தலைவர் துளசிராஜன்,  பிடிஏ  கழகத் தலை வர் வரதராஜ் மற்றும் சேட்டு நடராஜ், பழனிசாமி, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.