tamilnadu

img

தென்னை சாகுபடி தொழில் நுட்பம், மதிப்பு கூட்டுதல் பயிற்சி

இளம்பிள்ளை, பிப்.13- வீரபாண்டி அருகே பைரோஜி பகுதியில்  தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் , மதிப்பு கூட்டுதல் பயிற்சி வியாழனன்று நடைபெற்றது.  சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டா ரத்திற்குட்பட்ட பைரோஜி பகுதியில் தென்னை வளர்ச்சி வாரியத்திட்டதின் கீழ் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து விவ சாயிகள் கருத்தரங்கு பைரோஜி களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் நடை பெற்றது. இதில் வேளாண்மை உதவி  இயக்குனர் என்.நாகபசுபதி கலந்து கொண்டு தென்னை சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் மற்றும் மதிப்பு கூட்டுதல்  ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்து ரைத்தார். மேலும் இப்பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குனர் (பொ)  ர.பன்னீர்செல்வம் தலைமை ஏற்று தென்னை பயிர் காப்பீடு செய்வது பற்றியும்,  வளர்ந்த தென்னை தோப்புகளில் பரா மரித்தல், குரும்பை உதிர்தல் மற்றும் பென்சில் முனை குறைபாடு நிவர்த்தி பற்றியும் எடுத்துரைத்தார்.  மேலும், இப்பயிற்சி முகாமில்  பிரதம மந்திரி பென்சன் திட்டம், விவசாயி களின் ஆதார நிதி திட்டங்கள் குறித்தும், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், தென்னையை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் கட்டுப்பாடுகள் குறித்து  எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் பா.கார்த்தி காயினி, வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப உதவியாளர்கள் என்.செந்தில்நாதன், சுகன்யாதேவி, துணை வேளாண்மை அலுவலர் தே.சீனிவாசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கே.  ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவ லர்கள்  சிவசங்கர்,முருகன், கார்த்திகேயன் ,  தனபால்,  பழனிசாமி,தினேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் தீபன் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சி யில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் கையேடு வழங்கப் பட்டது.