சேலம், அக்.17- வாழப்பாடி அருகே இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி ராதிகா. இத்தம்பதியினரின் மூன்று வயது மகன் ஹரிபிரசாத். இந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு மன்பு வீட்டருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட இரும்பு கிரீல் கேட்டில் ஏறி விளை யாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது இரும்பு கிரீல் கேட் திடீரென சரிந்து விழுந்ததில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை மீட்டு சேலம் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஹரிபிரசாத் புதனன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.