tamilnadu

img

ரேசன் அரிசி கடத்தலை தடுக்காத அதிகாரிகள் வாலிபர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

சேலம், ஆக. 10- தமிழக முதல்வரின் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத் தலை தடுக்காத அதிகாரிகளை கண்டித்து வாலிபர் சங்கத் தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடை களில் விநியோகிக்கப்படும் இலவச அரிசியை சிலர் கடத்தி சென்று மாவாக்கி அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய ஆதாரங்களுடன் உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்பும் சம்பந்தப் பட்ட நபர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதனைக் கண்டித்தும், கடத்தலில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளை கைது செய்யக்கோரி யும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் கிழக்கு மாநகரக் குழுவினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்திற்கு மாநகரக் குழு பொருளா ளர் ஆர்.ஏ.முருகன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் பி.கணேசன், கிழக்கு மாநகரத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பெரியசாமி, வடிவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;