tamilnadu

img

பேரூராட்சிகளுக்கும் வேலை திட்டத்தை அறிவித்திடுக விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், நவ. 6- நூறு நாள் வேலையை 200 நாட் களாகவும், தினக்கூலியாக ரூ.600 ஆக வும் உயர்த்தி வழங்கிடக்கோரி விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கீரிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் பேரூ ராட்சி உள்ளிட்ட சிறு நகரங்களுக் கான வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிவித்திட வேண்டும். கொரோனா கால நிவாரணமாக குடும்பத்திற்கு மாதத்திற்கு ரூ.7 ஆயித்து 500 வழங் கிட வேண்டும். 60 வயதை கடந்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதிய மாக ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கீரிப்பட்டி பேரூ ராட்சி அலுவலகம் முன்பு அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் தாலுகா செயலாளர் கே.அழகு தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் தங்கவேல், சிபிஎம் தாலுகா செய லாளர் எ.முருகேசன், துரைசாமி, தங் கம்மாள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.