சேலம், ஜூலை 25- சேலத்தில் தள்ளுவண்டிக் கடைகள் மற் றும் டீ கடைகளில் வியாபாரம் செய்ய கூடு தல் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சிபிஎம் கிழக்கு மாநகர குழு சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை உள் ளிட்ட பகுதிகளில் தள்ளுவண்டிக் கடைகள் அதிக அளவில் உள்ளது. இதில், பானிபூரி, தட்டுவடை செட், சில்லிசிக்கன் உள்ளிட்ட வற்றை விற்று போக்குவரத்திற்கு இடை யூறின்றி வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த 15 வருடங்களாக இப்பகுதிகளில் இந்த தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளது. தற்போது கொரோனா தடுப்பு நட வடிக்கை என்ற பெயரில் மாலை 4 மணிக் குள் கடைகளை மூட வேண்டும் என மாந கராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தள்ளுவண்டிக் கடைகளில் மாலை நேரத்தில்தான் வியாபாரம் செய்ய முடியும். மாலை கடைகளைப் பூட்டினால் தங்களின் குடும்ப வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும். எனவே தள்ளுவண்டி கடை கள் மற்றும் சிறிய தேநீர் கடைகளை இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.
கடந்த நான்கு மாதங்களாக மாந கராட்சி அதிகாரிகள் 500,1000 ரூபாய் அப ராதம் வசூலித்து வருவது மேலும் தங்களை வஞ்சிப்பதாக உள்ளது எனவும் அப்புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இம்மனுவினை கிழக்கு மாந கர குழு நிர்வாகிகள் பொன்.ரமணி, ஜி.சுல் தான், பச்சமுத்து, சிஐடியு மாட்ட துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை யில் தள்ளுவண்டி வியாபாரிகள் திரண்டு வந்து மனு அளித்தனர்.