ஏற்காடு, பிப். 19- ஏற்காட்டில், பேரிடர் மீட்பு குறித்து செயல் விளக்கம் செவ்வாயன்று நிகழ்த்தப்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பேரிடர் மீட்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கம் நிகழ்த்தப்பட்டது முன்னதாக, ஏற்காடு வட்டாட்சியர் தலைமையில், காவல் ஆய்வாளர் ஆனந்தன் முன்னிலை வகிக்க மாணவர்கள பேரணி நடைபெற்றது. பேரணி ஒண்டிக்கடை, அண்ணா பூங்கா பகுதியில் துவங்கி சந்தை பேட்டை வழியாக படகு இல்லத்தில் நிறைவடைந்தது. தற்போது கோடை காலம் துவங்கியதையொட்டி, சுற்றுப்புற குப்பைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அப்புறப்படுவதுடன், தூய்மையாக பராம ரிக்க வேண்டும். தீப்பற்றினால் தீயணைப்புதுறைக்கு தெரி விப்பது குறித்தும், பேரிடர்களில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்தும் தீயணைப்பு நிலைய அலுவலர் கணே சன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் தீயணைப்பு துறையினர் . பேரிடர்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செய்து முறை விளக்கம் அளிக்கப்பட்டது.