சேலம்,டிச11- தமிழகத்தில் அனைத்து கல்வி யியல் கல்லூரிகளும் தேசிய அளவி லான தரவரிசைப் பட்டியலில் இடம் பெறும் வகையில், தங்களுடைய கல் விசார் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்க லைக்கழகத் துணைவேந்தர் என்.பஞ்சநாதம் தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகம் மற்றும் பத்மவாணி கல்வியியல் கல்லூரி இணைந்து, ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களின் செயல்திறன் மதிப் பீட்டு அறிக்கையை இணையத ளத்தில் சமர்ப்பித்தல் தொடர்பாக ஒரு நாள் பயிலரங்கினை நடத்தி யது. பயிலரங்கினை பத்மவாணி கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.சத்தியமூர்த்தி தொடங்கி வைத் தார். பத்மவாணி கல்வியியல் கல் லூரி முதல்வர் பி.முத்துக்குமார் வர வேற்றார். இந்நிகழ்வில், தமிழ்நாடு ஆசிரி யர் கல்வியியல் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் என்.பஞ்ச நாதம் தலைமை வகித்துப் பேசிய தாவது:- தமிழகம் முழுவதும் 700க் கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூ ரிகள் இயங்கி வருகின்றன. கல்லூ ரிகளின் செயல்திறனை அதிகரிக் கும் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒருபகுதியாக, அனைத்து கல்வி யியல் கல்லூரிகளின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை வரும் டிசம்பர் 31-ந்தேதிக்குள் தேசிய ஆசிரியர் கல்விக்குழும இணைய தளத்தில் பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்வது குறித்த பயிலரங்கம் சென்னை,சேலம் மற்றும் மது ரையில் நடத்தப்படுகிறது. ஒவ் வொரு கல்வியியல் கல்லூரியும் தேசிய மதிப்பீடு மற்றும் தர நிர்ணய அங்கீகாரத்தை பெறுவ தற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் தேசிய அள விலான தர வரிசைப் பட்டியலில் இடம்பெற முடியும். மேலும், கல்வி யியல் கல்வி தொடர்பான ஆய்வு களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு களின் நிதிகளையை பெற முடி யும்.ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தரமானதாக இருந்தால் மட்டும் தான் திறன்மிக்க ஆசிரியர்களை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இப்பயிலரங்கில், தேசிய ஆசிரி யர் கல்விகுழுமத்தின் உறுப்பினர் செயலர்கள் பிரபுகுமார் யாதவ், சதீஸ்குமார் ஆசிரியர் கல்வி நிறு வனங்களின் தரத்தின் முக்கி யத்துவத்தை பற்றியும், மதிப் பீட்டு அறிக்கையை இணையத ளத்தில் சமர்ப்பிப்பது குறித்து பயிற்சியளித்தனர். இந்நிகழ்வில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல் கலைக்கழகத்தின் கல்வித்திட்ட மிடல் மற்றும் நிர்வகித்தல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.மணி, உதவிப்பேராசிரியர்கள் சி.இ. ஜெயந்தி,மு. தேவிஸ்ரீ மற்றும் 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரி யர் கல்வி நிறுவனங்களின் தாளா ளர்கள், செயலாளர்கள் மற்றும் முதல்வர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட னர்.