14 வயதில் செஸ் உலக சாம்பியன்
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயதான பிரக்ஞானந்தா தான் பங்கேற்ற 10 சுற்றில் 7 வெற்றி, 3 டிரா என 8.5 புள்ளிகளுடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் ஜெர்மனி வீரர் வேலன்டினை டிரா (34வது நகர்த்தலின் போது) செய்தார். இதன் மூலம் மேலும் 9.0 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று சாதித்தார். மும்பை உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் 3 வெள்ளிப்பதக்கம் உட்பட மொத்தம் 6 பதக்கம் வென்று வரலாறு படைத்தனர்.