tamilnadu

img

திண்டிவனத்தில் வாலிபர் சங்கம் தூய்மைப் பணி

விழுப்புரம், டிச.9- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி பள்ளியில் தூய்மை பணியில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர். பெஞ்சால் புயல்  கனமழையால் பாதிக்கப்பட்ட திண்டிவனம் (காவேரிபாக்கம்) நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  2 நாட்களாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.கண்ணதாசன் தலைமையில் முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகி ஆர்.பி.குமரேசன், வட்ட நிர்வாகிகள் எஸ்.பார்த்திபன், ஏ.சதீஷ்குமார்,இரா.பாரதிதாசன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.