புதுச்சேரி, அக். 30- தீபாவளி பரிசுத் தொகை வழங்காததை கண்டித்து புதுச்சேரி தலைமைச் செயல கத்தில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி பிரதேசத்தில் 27 வகையான தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் இத்தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு இக்கூப்பன் வழங்கவில்லை. மேலும் இச்சங்கத்திற்கு தலைவராக உள்ள தலைமைச் செயலாளர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே அப்பொறுப்பில் இருந்து தலைமைச் செயலாளரை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு பிர தேசத் தலைவர் கே.முருகன் தலைமை தாங்கி னார். சிஐடியு பிரதேசச் செயலாளர் சீனு வாசன் நிர்வாகிகள் பிரபுராஜ், மணிபாலன், மதிவாணன், அழகர்ராஜ், மணவாளன் உள்ளிட்ட திரளான அமைப்பு சாரா தொழி லாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தில் பங்கேற்ற சங்கத் தலை வர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் சில தினங்களுக்குள் தீபாவளி பரிசுக் கூப்பன் தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.