tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
அம்பத்தூர், ஏப்.27- அம்பத்தூர் அருகே கட்டடப் பணியின் போது மின்சாரம் பாய்ந்து தொழி லாளி உயிரிழந்தார்.

அம்பத்தூர் அடுத்த திரு முல்லைவாயல் பெரியார்  நகர் பாரதியார் தெருவைச்  சேர்ந்தவர் ராம்பாபு (28). இவர்  திருமுல்லைவாயல் கலைஞர் நகர் பகுதியில்  உள்ள ஒரு வீட்டில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர்  சுவற்றை உளியால் உடைத்த போது, அதில் உள்ளே சென்ற  மின் வயரில் உளி பட்டதில் மின்சாரம் பாய்ந்து ராம்பாபு மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரி சோதனை செய்த மருத்து வர்கள் அவர் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  இது குறித்த புகார் பேரில்  திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்துகளை   ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை, ஏப்.27- சென்னையில் இயங்கப் படும் மாநகர பேருந்து உள்ளிட்ட 20,000 பேருந்து களை ஆய்வு செய்து  அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகத்திற்கு  போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

போதை ஊசி  
செலுத்திக்கொண்ட வாலிபர் உயிரிழப்பு

சென்னை, ஏப். 27- சென்னை புளியந் தோப்பு பட்டாளத்தில் போதை மருந்தை ஊசி  மூலம் செலுத்திக் கொண்ட வர் உயிரிழந்தார்.

சென்னை புளியந் தோப்பு பட்டாளம் கனகராய  தோட்டம் பகுதியில் வசிப்பவர் கருணாகரன். இவரது மகன் கஞ்சா மணி (எ) தீனதயாளன் (26). இந்நிலையில் தீனதயாளன் வெள்ளிக்கிழமை இரவு  தனக்குத்தானே ஊசி மூலம்  உடம்பில் செலுத்திக் கொண்ட போதை மருந்தின்  காரணமாக மயக்கம் அடைந்தார்.

உடனே அவரை உடன்  ஊசி செலுத்திக் கொண்ட நண்பர்கள் சஞ்சய் (21),  சஞ்சய் (21), பிரபு (20) ஆகி யோர் உடனே புளியந் தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டு ஓடி விட்ட தாகக் கூறப்படுகிறது. மருத்துவர்கள் அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக் காக அரசு ஸ்டான்லி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பல னின்றி சனிக்கிழமை காலை  இறந்துள்ளார். இது குறித்து புளியந்தோப்பு காவல் துறையினர் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.