தாம்பரம் வட்டத்தில் விஏஓ-க்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு
சென்னை,மே 7- தாம்பரம் வட்டத்தில் மக்கள் தொகை மற்றும், சேவை அடிப்படையில் விஏஓ-க்கள் பணி யிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக வருவாய்துறை நிர்வாகத்தில், 16ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரு வாய் கிராமங்கள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 வருவாய் கோட்டங்களும், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செங்கல்பட்டு, செய்யூர், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 8 வட்டங்களும், 40 உள்வட்டங்களும், 636 வருவாய் கிராமங்களும் உள்ளன. பல்லாவரம் வட்டத்தில் மக்கள் தொகை மற்றும் சேவை யின் அடிப்படையில் புதிய பணி யிடங்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் உரு வாக்கப்பட்டுள்ளது. அதன்படி பம்மல், அனகாபுத்தூர், பல்லா வரம் என 3 கிராமங்களுக்கு புதிதாக, 3 விஏஓ பதவிகள் உரு வாக்கப்பட்டுள்ளன. அதே போல் அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் வடக்கு, தெற்கு என, வருவாய் ஆய்வாளர் கள் பணியிடம் உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால், தாம்பரம் வட்டத்தில் புதிய விஏஓ பதவியிடங்கள் உருவாக்கப்பட வில்லை. மாறாக வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மேடவாக்கம், தாம்பரம், மாடம்பாக்கம், சிட்ல பாக்கம் என 4 வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. தற்போது பெரும் பாக்கம், முடிச்சூர் என 2 புதிய வருவாய் ஆய்வாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உருவாக்காததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக முடிச்சூர், மதுரப் பாக்கம், பெரும்பாக்கம், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் போன்ற கிராமங்கள் மிகப் பெரிய கிராமங்கள் ஆகும். இவற்றை பிரித்து புதிய விஏஓ, பணியிடங்கள் உரு வாக்கி இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். பெரும்பாக்கம், பெருங்க ளத்தூர், முடிச்சூர், ராஜ கீழ்ப்பாக்கம் போன்ற பகுதி களில் மக்கள் தொகை அதி கம் உள்ளது. வருவாய் கிரா மங்கள் மக்கள் தொகை, நிலப்பரப்பின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் வருவாய் கிராமங்கள் நீண்ட காலமாக பிரிக்கப்படவில்லை. இதனால் விஏஓக்கள் பணிச்சுமை யால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு பயிர் சேதங்களுக்கு இழப்பீடு, சமூகம், வருமானம், பிறப்பு, பட்டா மாற்றம், ஆண் குழந்தை இல்லை, திருமணம், கடன் தீர்வு, ஓ.பி.சி. உள்ளிட்ட 23-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் விஏஓ-க்களால் வழங்கப்படு கின்றன. மக்கள் நலனை கருத்தில் கொண்டும் விஏஓக்க ளின் பணிச்சுமையை குறைக்க வும் கோரிக்கையை அரசு நிறை வேற்ற முன்வர வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலு வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.