சென்னை,மார்ச் 10- இந்தியாவில் சமூக வலைதளங்களை லட்சக்கணக்கான பெண்கள் பயன்படுத்துகிறார்கள். நல்ல விஷயங்களை பகிர்ந்துகொள்ளவும் பொழுதுபோக்கிற்காகவும் அவர்கள் அதனை பயன்படுத்தும் போது அதில் உள்ள மற்ற சிலர் தவறாக வழிநடத்தமுற்படும்போது அதில் இருந்து தற்காத்துக் கொள்ள ஷேர் சாட் சமூக வலைத்தளம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘ஷேர் சாட் சக்தி’ என்ற பாதுகாப்பு அம்சங்களை மகளிருக்காக சேர்த்துள்ளது. இதனால் தேவைற்ற நபர்களை தடை செய்யலாம். பிரச்சனை செய்வோர் மீது புகார் அளிக்கலாம். மேலும் உங்களைப்பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை மற்றவர்கள் பதிவிறக்கம் செய்யவும் தடைவிதிக்க முடியும். மேலும் ஷேரிங் மற்றும் கருத்து கூறுவதை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஷேர் சாட் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.