அனைவருக்கும் உணவு, வேலை வழங்க வேண்டும், பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 1) தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட மையங்களில் போராட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்தியது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அதன்ஒருபகுதியாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.