சென்னையில் ஷூவில் இருந்த பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கே.கே. நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சுமித்ரா நேற்று முன் தினம் இரவு சுமார் 9 மணி அளவில் வீட்டை சுத்தம் செய்துள்ளார். வாசலில் இருந்த ஷூக்களை நகர்த்தி வைத்துள்ளார். அப்போது ஷூவில் மறைந்திருந்த பாம்பு ஒன்று சுமித்ராவின் கையில் கடித்துள்ளது. இதையடுத்து அவரது கணவர் சுமித்ராவை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமித்ரா சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.