tamilnadu

img

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை

வேலூர், ஜூலை 25- ஜவ்வாதுமலை அருகே சுற்றித்திரிந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. ஜவ்வாதுமலை, புதூர்நாடு காப்புக் காட்டில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஊருக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்த திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் கே.ஆர்.சோழராஜன் அறிவுறுத்தலின் பேரில், வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் அங்கு சென்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன் யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.