சென்னை, ஜூலை 15- சென்னையில் போக்குவரத்து நெரி சலை குறைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் நெரிசல் மிகுந்த சாலைகளை அகலமாக்குவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக நெரிசல் மிகுந்த சாலை களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கிய சென்னை மாநகராட்சி முதல் கட்டமாக டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, திருவான்மியூர் லட்டிஸ் பாலம் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. ராதாகிருஷ்ணன் சாலை 30.5 மீட்டராக அகலப்படுத்தப் பட உள்ளது. இந்த சாலை விரி வாக்கம் செய்யப்பட்டால் மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்டிஸ் பாலம் சாலையின் அகலம் 30.5 மீட்டராகவும், பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் நியூ ஆவடி சாலை 18 மீட்டராகவும் அகலப் படுத்தப்பட உள்ளது. இதற்காக சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சில சாலை களை விரிவுபடுத்துவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- முதல் கட்டமாக தெரிவுசெய்யப் பட்ட 4 சாலைகள் அகலப்படுத்தப் பட்டு பின்னர் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மற்ற சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படும். சாலை கள் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு போக்குவரத்து சீராக நடை பெறுவதற்கு ஏற்ற வகையில் சாலை யின் மேற்பரப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.